search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்துறை ஊழியர்கள்"

    • தலைமை மின்துறை அலுவலக வாயிலில் மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • 189 கட்டுமான உதவியாளர்களை, பதவி உயர்வு மூலம் உதவியாளர்களாக நிரப்பவேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட மின்துறையில், காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும், பதவி உயர்வு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் தலைமை மின்துறை அலுவலக வாயிலில் மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மின்துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் வேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், கடந்த பல ஆண்டுகளாக மின்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும். குறிப்பாக, 189 கட்டுமான உதவியாளர்களை, பதவி உயர்வு மூலம் உதவியாளர்களாக நிரப்பவேண்டும். கடந்த 14 ஆண்டுகளாக நிரப்ப படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள டெஸ்டர் பதவியினை உடனே நிரப்பவேண்டும். 2006ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஊழி யர்களை விட, 2011ல் சேர்ந்த ஊழியர்கள் அதிகம் சம்பளம் வாங்கும் முரண்பாடுகளை நீக்கவேண்டும். யூனியன் பிரதே சங்களில் மின்துறை யை தனியார் மயமாக்கும் மத்திய, மாநில அரசின் முடிவைக் முழுமையாக கைவி டவேண்டும். உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறு த்தப்பட்டது. மேலும், மின்துறை ஊழிய ர்களின் கோரி க்கையை போர்க்கால அடிப்ப டையில் நிரப்பா விட்டால், காரைக்காலில் உள்ள அரசு ஊழியர்கள் நலசங்க ஙக்ளை ஒன்று திரட்டி, மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, சங்க தலைவர் தெரிவி த்துள்ளார்.

    • புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவுக்கு மின்சார வாரிய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • பல இடங்களில் பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மின் பழுது நீக்குதல், கட்டணம் வசூல், மின்அளவீடு செய்தல் போன்ற அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின்துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் இருளில் மூழ்கியது.

    இதைக் கண்டித்து தீப்பந்தம் ஏந்தியும், தடைகளை ஏற்படுத்தியும் பல இடங்களில் பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    மின்துறை ஊழியர்களின் போராட்டத்தால் மின்வெட்டு ஏற்படுமானால் மத்திய அரசின் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தின் (எஸ்மா) கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.

    இதற்கிடையே, தொடர்ந்து 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஊழியர்களை துணை ராணுவம் மற்றும் போலீசார் நேற்று கைது செய்து நள்ளிரவில் விடுவித்தனர்.

    இந்நிலையில், மின்துறை ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அதில் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    அப்போது, மின்துறை ஊழியர்கள் முதல் மந்திரி ரங்கசாமியை சந்திக்க சட்டபேரவைக்கு வந்தனர். இதனால் அமைச்சரவை கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மின்துறை ஊழியர்களுடன் முதல் மந்திரி ரங்கசாமி மற்றும் மின்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்துறை ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல் மந்திரி ரங்கசாமி உறுதியளித்ததைத் தொடர்ந்து கடந்த 6 நாளாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

    ×